search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எங்கு சென்றாய் என் உயிரே"

    ஆர்.வி.பாண்டி இயக்கத்தில், தருண், ராபியா, அனன்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘எங்கு சென்றாய் என் உயிரே’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் தருண் ஊரில் வேலை இல்லாமல் இருக்கிறார். இவருடைய அப்பா ஆர்.வி.பாண்டி போலீஸ் ஏட்டாக இருந்து வருகிறார். தருணுக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. கனவில் ஒரு பெண்ணை காதலிக்கிறார். அந்த கனவு தினமும் தொடர்கிறது. கனவில் காதலியுடன் பல இடங்களுக்கு செல்கிறார் தருண்.

    அந்த பெண் யார் என்று நிஜத்தில் தேட ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் கனவில் சென்ற இடங்களை நிஜத்தில் பார்க்கிறார். மேலும் அந்த பெண் அருகில் எங்கையோதான் இருக்கிறார் என்று உணர்கிறார்.

    இந்நிலையில், தொழில் அதிபர் கேபிஜே-வின் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்கிறார் தருண். கனவில் வரும் காதலி ஒருநாள் ஒருவரை கொலை செய்ய தூண்டுகிறார். தன்னுடைய முதலாளிதான் கொலை செய்யும் நபர் என்று தருணுக்கு தெரியவருகிறது.



    இறுதியில் நாயகன் தருண் தன்னுடைய முதலாளியை கொலை செய்தாரா?, கனவில் வரும் நாயகியை நேரில் சந்தித்தரா? நாயகி தொழில் அதிபரை கொலை செய்ய சொல்ல காரணம் என்ன? என்பதை திரில்லருடன் சொல்லியிருக்கிறார்கள்.

    படத்தின் நாயகன் தருண், நாயகி ராபியா ஆகியோர் தங்களால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் போலீஸ் ஏட்டாகவும் நடித்திருக்கிறார் ஆர்.வி.பாண்டி. தொழில் அதிபராக வரும் கேபிஜே, மற்றொரு நாயகியாக வரும் அனன்யா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



    இயக்குனர் ஆர்.வி.பாண்டி, நடிகர்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். சொல்ல வந்த கதையை தெளிவாக சொல்லியிருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் என்ன தரமுடியோ அதை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். குழப்பம் இல்லாத திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. 

    கோல்டு சந்துருவின் ஒளிப்பதிவும், ஏ.கே.ராம்ஜியின் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘எங்கு சென்றாய் என் உயிரே’ பார்க்கலாம்.
    ×